Friday 3rd of May 2024 12:00:57 AM GMT

LANGUAGE - TAMIL
.
திருமலையில் கொரோனா தொற்று 9 ஆக உயர்வு: மூதூர் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!

திருமலையில் கொரோனா தொற்று 9 ஆக உயர்வு: மூதூர் பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தல்!


பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு திருகோணமலையில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.

திருகோணமலை மூதூர் நெய்தல் நகர் பகுதியில் 2 பேருக்கும் இக்பால் நகர் பகுதியில் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை சுகாதார பிரிவு தரப்பில் இருந்து அருவி இணையத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேலியகொட கொத்தணியுடன் தொடர்புபட்டு முன்னதாக திருகோணமலையில் 6 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

அதற்கமைவாக புல்மோட்டையைச் சேர்ந்த ஒருவருக்கே முதன் முதலில் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மேலும் திருகோணமலை சுமேதகம பகுதியில் ஒருவருக்கும், அபயபுர பகுதியில் ஒருவருக்கும், 5ம் கட்டை பகுதியில் ஒருவருக்கும், தம்பலகாமம் பகுதியில் ஒருவருக்கும், கொழும்பு என்.டி.பி. வங்கி பணியாளர் ஒருவருக்கும் என ஆறு பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.

இதையடுத்து இதுவரை திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதியானவர்களது எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து அவசியத் தேவைகள் இன்றி மூதூர் பகுதிக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு வெளியிடங்களைச் சேர்ந்த மக்களுக்கு பொலிசாரால் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Category: செய்திகள், புதிது
Tags: கொரோனா (COVID-19), இலங்கை, கிழக்கு மாகாணம், திருகோணமலை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE